கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், செல்ஃபி எடுத்த சதீஷ்குமார் என்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தார். உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.




