பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளிக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதன் 21ஆவது தவணையின் ரூ.2,000 தொகை தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணம் வராததால், விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பணம் அடுத்த வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.




