இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய கடின உழைப்பைக் கொடுத்துள்ளதாகவும், அதிர்ஷ்டமும் சிறிது தேவை என்பதை நம்புவதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு வீரரும் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என விரும்புவார்கள் என்றும், அதனால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருப்பதாகவும் ஷமி தெரிவித்தார்.




