கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு வங்கி கணக்குகளில் இன்று (டிச.12) ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் கிட்டத்தட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் தகுதிபெற்றவர்களுக்கு இந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.




