இந்த நவீன காலகட்டத்தில் பலரும் பல விதமான நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு சிலருக்கு சின்னதாக தண்ணீர் மாற்றி குடித்தால் கூட சளி தொண்டை வலி என பல பிரச்சினைகள் வருகிறது. இந்நிலையில் வாய்ப்புண் முதல் தொண்டை வலி மற்றும் வாய் துர்நாற்றம் வரை அனைத்தையும் சரி செய்யும் பனங்கற்கண்டு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் குணமாகும்.
பனங்கற்கண்டு வாயில் போட்டு அப்படியே வாயில் வைத்து கொண்டு அதில் சுரக்கும் உமிழ் நீரை சிறிது சிறிதாக விழுங்க வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவைகள் முற்றிலும் குணமாகும். மேலும் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை சரிசெய்யும்.




