பூட்டிய வீட்டில் தூய்மைப் பணியாளர் சடலம்: பழகிய நபர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் லதா (45), பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லதாவுடன் சுமார் 12 ஆண்டுகளாகப் பழகி வந்த முனிவேல் (65) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




