இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பில் இல்லாத நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள பட்டதாரிகளில் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறன் பயிற்சிகளை அதிகரிக்கவும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.




