மதுரை ஐகோர்ட் கிளையில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணி குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.




