இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவு மற்றும் நம் பற்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றாலும் அல்லது இனிப்பு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் சொத்தைப்பல் வருவது உண்டு மேலும் சில நேரங்களில் பல்வலி அதிகரித்து நம்மை கவலைக்கு தள்ளும்…
ஆயுர்வேதத்தில் புங்கைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு, சிறப்பு வாய்ந்த புங்கை மரத்தின் பல்வேறு பாகங்களை எரித்த பின்பு உருவாகும் சாம்பலை கொண்டு அதனைப் பயன்படுத்தும் பொழுது பல்வலி நீங்கும், மேலும் புங்கையின் சாம்பல் மற்றும் சிறிது உப்பு இவற்றை கலந்து பற்களில் பூசி வந்தால் பற்கள் வலி நீங்கும், மேலும் விரைவில் பற்களுக்கான நிவாரணம் கிடைக்கும் என்றும் பற்கள் வலியிலிருந்து விடுபடலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர், அதுமட்டுமல்லாமல் பற்களில் உள்ள பிரச்சனைகள் அதாவது ஈறுகளில் ரத்தம் கசிவது ஈறுகள் வீக்கம் அல்லது சொத்தைப்பல் போன்ற பிரச்சனைகளுக்கு புங்கை சாம்பல் சிறந்த ஆயுர்வேத தீர்வாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!




