
ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டத்தை சேர்ந்தவர் நாகதீப்தி. 18 வயதான இவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இளைஞர்கள் இவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.