என் காதலியே.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

மெய் பேசும் இரு விழியே
பொய் பேச உதடுகளே
பெண் பூவே

அன்பு தந்த கண்களுக்கு
என் மனதை நான் கொடுத்தேன்
கில்லிதந்த அவள் மனதை
என் இதயம் அள்ளிக்கொள்ள

என்னுடைய காதலி போல் – இங்கு
காதலை யாரும் சொன்னதில்லை
என்னுடைய காதலி போல் – இங்கு
யாருக்கும் கோபப்பட தெரிய வில்லை
என்னவள் கொலுசின் ஒளியில் கூட – அந்த
காதலை நானும் கொஞ்சம் கண்டுகொண்டேன்
முத்துக்கள் உதிரும் சிரிப்பில் கூட – அவள்
காதலை நானும் கொஞ்சம் கண்டுகொண்டேன்

எனக்குள் காதல் பிறந்ததன்று – அவள்
கண்களில் காதலை கண்டவுடன்

சொல்ல ஒரு வார்த்தை இல்லை – அவள்
கண்களில் நான் கண்ட காதலையும்
மெல்ல மெல்ல வரும் மழலை போல் – அவள்
என்னுள்ளே வந்து அமர்ந்துவிட்டால்
சட்டென காலில் குத்தும் முல்லை போல – என்
மனதில் காதலை விதைத்து சென்றால்
சஞ்சலப்பட்டு நின்ற போது – அவள்
கோபத்தை காட்டி அருகில் வந்தாள்

சொல்லின்றி இரு விழி பார்வையிலே – எனை
கீழேயும் தள்ளிவிட்டு சென்று விட்டால்

என் காதலியே
மெய் பேசும் இரு விழியே
பொய் பேச உதடுகளே
பெண் பூவே…

Read Previous

குரு பெயர்ச்சி..!! குவியும் பக்தர்கள்..!! எங்கு தெரியுமா?..

Read Next

கண் திருஷ்டியை வீட்டிலிருந்து ஓட ஓட விரட்டணுமா?.. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular