எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வது நல்லதா..??

Oplus_131072

எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வது நல்லதா..??

தமிழர்கள் அதிகம் உண்ணும் உணவுகளில் ஒன்று தான் எள்ளு.

இது உலகிலேயே மிகப் பழமையான எண்ணெய் விதைப் பயிர்களுள் ஒன்று.

எள்ளில் காப்பர், கால்சியம்,

மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, ஜீங்க், புரதச்சத்து போன்றவை உள்ளது.

அதுமட்டுமின்றி எள் உருண்டை உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை தருகின்றது.

தற்போது எள்ளுருண்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது

இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து,

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.

எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை தொடர்ந்து மூலம் போக்க முடியும்.

தலைமுடி மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி அவர்களுக்கு நல்ல தோற்றத்தை தருவதோடு இல்லாமல்,

உச்சந்தலையை வெப்பம் மற்றும் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது.

ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.

உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.

எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது.

இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால்

அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.

Read Previous

கணவன் மற்றும் மனைவி கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ரேஷன் பயனர்களுக்கு ரூ.5,000?.. அமைச்சர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular