சேலம் சங்ககிரி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன் சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் இளம்பெண்ணின் தலைப்பகுதி முழுவதும் பாலித்தீன் பையால் இறுக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுத்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




