சேலத்தில், வீட்டில் இருந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரரான தாத்தா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இது குறித்து சிறுமி குழந்தைகள் நல குழும அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் சிறுமியை மீட்டு அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




