மூத்த விண்வெளி விஞ்ஞானியும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான டாக்டர் ஏக்நாத் சிட்னிஸ் இன்று (அக்., 22) மகாராஷ்டிராவின் புனேவில் காலமானார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாக போற்றப்படும் விக்ரம் சாராபாயால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏக்நாத் சிட்னிஸ். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் சிற்பியும், நாட்டின் தொலைதூர கிராமங்களுக்கு தொலைக்காட்சியைக் கொண்டு வந்த தொலைநோக்கு பார்வையாளருமாக அறியப்பட்ட இவர், இஸ்ரோவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




