
குழந்தைகள் பல பேருக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் இன்று பாஸ்தாவை வைத்து பிரியாணி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்தா – 300 கிராம்
குடைமிளகாய் – 2
கேரட், பீன்ஸ் – உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப
தக்காளி – மூன்று
வெங்காயம் – நான்கு
கொத்தமல்லி, புதினா – அரைக்கட்டு
தயிர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள், கரம் மசாலா – இரண்டு ஸ்பூன்
தனியாத்தூள் – இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2
சோம்பு – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி – சிறிதளவு
செய்முறை :
முதலில் குடைமிளகாயை நீலவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை குட்டியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் பாஸ்தாவே போட்டு அரை அளவு வெந்தபின் இறக்கி வைத்து விடவும்.
ஒரு கடை எடுத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளியை அதில் போட்டு நன்றாக வதக்கி கொத்தமல்லி புதினா குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து காய்கள் வேகுவதற்கு தண்ணீர் ஊற்றி வைக்கவும். அது வெந்த பிறகு பாஸ்தாவே அதில் சேர்த்து கிளறி இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா பிரியாணி தயார்.