திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிவப்பிரகாசம் (17). கடந்த பிப்.4-ம் தேதி வகுப்பறையில் புத்தக பையை திறந்தபோது உள்ளே இருந்த கட்டுவிரியன் பாம்பு எதிர்ப்பாராத சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.




