இந்த நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளால் மன அழுத்தம் என்பது இருக்கிறது. இது பெரியவர்களுக்கு தான் வருகிறது என்று கூறினாலும் சமீப காலமாக குழந்தைகளுக்கும் இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன அழுத்தத்தை குறைக்க இஞ்சி மிகவும் உதவுகிறது. இஞ்சியை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அல்சைமர் போன்ற மன நோய்களை தடுக்க இது மிகவும் உதவுகிறது. இஞ்சி கொழுப்பை கரைப்பதால் எடையை குறைக்க உதவுகிறது. இஞ்சி வெப்பத்தை உருவாக்குகிறது. எனவே சளி மற்றும் இருமலை தடுக்க மிகவும் உதவுகிறது. நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள அலர்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள டையூரிட்டிகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இது மாற்றுகிறது.




