அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் ஆகிய 29,29,000 பயனாளிகளுக்கு வழக்கமாக ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொகையுடன் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 உடன் சேர்த்து ரூ.3200 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 5,92,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 வரவு வைக்கப்பட்டுள்ளது.




