முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி வருவதற்கு இந்த நோய் தான் காரணமாம்?..

முகத்தில் வளரக்கூடிய தேவையற்ற இடங்களில்  முடிகள் உருவாகுவதற்கான காரணம் என்ன என்பதையும் அதற்கான மாற்று வழியையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

முகத்தின் முடி

பெண்களின் மேல் உதடு மற்றும் கன்னத்தில் முடி அதிகமாக இருக்கும். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பல காரணங்களால் இருக்கலாம்.

அதாவது சில பெண்களுக்கு சிறுவயதில் இருந்து வராமல் திடீரென்று வந்தால் அது பிசிஓஎஸ் என்று அழைக்கப்படுகிறது.  இதில் கருப்பையில் வீக்கம் ஏற்படுவதால் ஹார்மோன் சமநிலை தொந்தரவு செய்யப்படுகிறது.

இதனால் தான் பெண்களின் முகத்தில் கருப்பு மற்றும் அடர்த்தியான முடி வளரும். அதன் அறிகுறிகள் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு மற்றும் விரைவான முடி உதிர்தல். காணப்படுகின்றன.

பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன்கள் கூடினாலும் இந்த முடி வளர்ச்சி வரும். இதனால் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் அதிக முடி வளரத் தொடங்குகிறது.

இந்த ஹார்மோன் காரணமாக, சில நேரங்களில் பெண்களின் குரலும் கனமாகத் தொடங்கும்.நொதியங்களின் இடையூறுகளாலும் பெண்களின் உடலில் முடி வளர்ச்சி உண்டாகும்.

சில நோய்களுக்கான மருந்துககளை எடுத்துக்கொள்ளும் போதும் முடி தோலில் வேகமாக வளரத் தொடங்குகிறது. ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு முக முடி வளர்ச்சியில் பிரச்சனைகள் இருக்கலாம்.

Read Previous

பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?..

Read Next

ரூ.37,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலை..!! தேர்வு கிடையாது..!! நேர்காணல் மட்டுமே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular