விட்டு சென்ற பின்னும் விலகாமல் தொடர்வது காதல்..!!

காதல் என்பது கண்களுக்கு ஒலி போல இதயத்திற்கு துடிப்பு போல இன்பத்திற்கு பாடல் போல துன்பத்திற்கு பாடலின் வரிகள் போல எத்தனை காதல் சேர்ந்ததோ எத்தனை காதல் பிரிந்ததோ அத்தனையும் கணக்கெடுத்தால் இந்த உலகம் காதலுக்காக தோன்றியது போல் தோன்றும்..

காதலில் இருவரும் திளைத்து ஒருவரை ஒருவர் புரிந்து ஆயுள் வரை மனங்களோடு மனமாக கலந்து சிரிப்பில் சோர்வை கரைத்து அழுகையில் அரவணைப்பை கைகோர்த்து நேசிக்கின்ற வேளையில் சொந்தமெல்லாம் தூர நின்று வேடிக்கை பார்த்திடும் அவள் கண்கள் மட்டுமே என் இதயத்தை ஈர்த்திடும், அவள் என்னை விட்டு நீங்கிய போதும் என் நினைவுகள் அவளையே துரத்துகிறது தூர நின்று ரசிக்கிறாள் என்னை தொட மறுக்கிறாள் தொட்டு செல்லும் காதல் எல்லாம் இதயத்தில் பட்டாம்பூச்சி போல் பறக்கிறது, அவள் வந்து செல்ல என் இதயம் இல்லமானது நானோ அனாதை இல்லத்தில் அவளுக்காய் காத்திருக்கிறேன் காதல் என்பது கரைவது அல்ல கரை சேர்வது காலம் கடந்தும் காத்திருப்பதும் ஒருவித காதல் தானே..!!

Read Previous

அம்மா என்ற பந்தத்திற்கு ஈடு இணை இல்லை எந்த சொந்தமும்..!!

Read Next

பிரபல நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular