ஆரோக்கியமான வாழ்க்கை: நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள்..!!

Oplus_131072

 

நம் உடலில் கழிவின் தேக்கம் வியாதியாக மாறுகிறது. எனவே உணவே மருந்து என்பதை புரிந்துக்கொண்டு, உண்ணும் உணவு முறைகளை ஒழுங்பகுபடுத்துவதின் மூலமாக மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமாகும்.

எனவே கழிவின் வெளியேற்றம் நோய் தீர்க்கும் வழி என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Read Previous

தினமும் இலவங்கப்பட்டை, சோம்பு கலந்த தண்ணீர் பருகினால் இவ்வளவு நல்லதா..??

Read Next

கொழுப்பு கல்லீரலை தவிர்க்க நிபுணரின் 3 ஆலோசனைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular