துபாயில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நாளை (செப்.14) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இரு அணிகள் நேருக்கு நேர் களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன், தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்தியாவின் ‘பி’ அணியே வீழ்த்தும் என்று கூறியுள்ளார்.




