இந்து மத வழிபாட்டில் மிக முக்கியமாக கருதப்படுவது தானம் செய்வது ஆகும். எந்த ஒரு விசேஷ நாட்களினாலும் பிறந்தநாள், திருமண நாள் எந்த நாட்களானாலும் சரி உங்களால் முடிந்த அளவு எதையாவது தானம் செய்யுங்கள் என்றே இந்து மத சாஸ்திரங்கள் கூறுகிறது. தானத்தில் உயர்ந்தது அன்னதானம் பொன் பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருத்தியடையாத மனிதன் போதும் என்று சொல்லி மன நிறைவோடு சொல்வது அன்னதானம் மட்டுமே. அதனால் அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர மற்ற வகையான தானங்கள் என்னென்ன அவற்றை செய்யும் போது என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
மஞ்சள் தானம்-மஞ்சளை தானத்தை செய்தால் மங்களம் உண்டாகும். பூமியை தானமாக கொடுத்தால் நிகபரசுகங்கள் கிடைக்கும். வஸ்திர தானம்-வஸ்திர தானம் என்றால் துணிமணிகளை தானமாக வழங்கினால் சகல ரோக நிவர்த்தி கிடைக்கும். கோ தானம்- பசுவை தானமாக வழங்கும்போது பித்ரு சாப நிவர்த்தி இல்லத்தின் தோஷங்கள் விலகி பலவித பூஜைகள் செய்த பலன்கள் கிடைக்கும். திலதானம்- எனப்படுவது எள்ளை தானம் செய்வது. இதை செய்வதால் பாப விமோசனம் கிடைக்கும்.
குலதனம்- குலதானம் என சொல்லப்படுவது வெல்லம். வெல்லத்தை தானமாக கொடுப்பது குல அபிவிருத்தி துக்க நிவர்த்தி கிடைக்கும். நெய்யை தானமாக கொடுப்பது வீடு பேரு கிடைக்கும். தேவர்களின் அனுக்கிரகம் உண்டாகும். வெள்ளியை தானமாக கொடுக்கும்போது பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். தேனை தானமாக வழங்குவது நல்ல சுகம் தரும். சொர்ண தானம் எனப்படும் தங்கத்தை தானமாக வழங்கும்போது கோடி புண்ணியம் உண்டாகும்.
தண்ணீர்தானம்- தண்ணீரை தானமாக வழங்குவது மனசாந்தி ஏற்படும். கம்பளி போர்வையை தானம் கொடுத்தால் துர் சொப்பன துர்சகுனங்கள் நிவர்த்தி ஆகும். பழவகைகளை தானமாக வழங்கினால் புத்திர பவித்ர அபிவிருத்தி கிடைக்கும். பாலை தானமாக வழங்கினால் சௌபாக்கியம் உண்டாகும். சந்தன கட்டையை தானமாக வழங்கினால் புகழ் மேலோங்கும். எல்லாத்திற்கும் முதன்மையாக கருதப்படுவது அன்னதானம் இதனால் சகல ஐஸ்வர்யங்கள் நம் வீட்டை தேடி வரும்.



