Firefighters extinguish fire from a tanker that exploded in Suleja, Nigeria, Saturday, Jan. 18, 2025. (AP Photo/Arise News)
பயங்கரவாத தாக்குதல்களால் உயிர் போவது இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை. பல நாடுகளில் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இருக்கும் பிரச்சினைகளால் சாதாரண மக்கள் பாதிப்படைவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் நைஜீரியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நைஜீரியாவில் கன்னிவெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 26 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு இருக்கும் போர்னோ என்னும் மாநிலத்தில் அரசுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் நீண்ட நாட்களாக மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
எதிரிப்படைகளை பழிவாங்க வைக்கப்பட்ட கண்ணி வெடியில் டேங்கர் லாரி சிக்கியதால் இந்த பரிதாபமான விபத்து நடந்துள்ளது. இதுவரையில் 15 ஆண்டுகளில் இப்படி வெடிவிபத்தில் நைஜீரியாவை சேர்ந்த 40,000 மக்கள் இறந்ததாக கூறுகின்றனர்.



