பளிச்சென்ற முகத்தைப் பெற இதை மட்டும் செய்யுங்க போதும்..!!
இந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் அனைவருமே பளிச்சென்ற முகத்தை பெற தான் விரும்புவோம். ஆனால் முகம் பளிச்சென்று இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்வி குறிதான். காரணம் நீண்ட நேரம் வெயிலில் சுற்றுவது மாசு கலந்த காற்று நம் சருமத்தில் படுவது அது மட்டும் இன்றி ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றாமல் இருப்பது நீண்ட நேரம் இரவில் கண் முழித்திருப்பது என பல காரணங்கள் இருக்கிறது. முகம் பளிச்சென்று இருக்காமல் இருக்க. இந்நிலையில் முகத்தை பளிச்சென்று ஆக்க வீட்டிலேயே இதை மட்டும் நாம் செய்தால் போதும். நீங்களே அசந்து போகும் அளவுக்கு உங்களுடைய சருமம் பளிச்சென்று மின்னும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பளிச்சென்ற முகத்தைப் பெற முல்தானி மெட்டி உடன் தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் சருமம் பளிச்சென்று மின்னும். எனவே கண்டிப்பா அனைவரும் இத ட்ரை பண்ணி பாருங்க



