கையளவு துத்தி இலை,
5 கிராம் மஞ்சள் தூள்,
சிறிது ஆமணெக்கு எண்ணெய்
அல்லது நல்லெண்ணெய்
விட்டு கல்லில் அரைத்து
வெளித்தள்ளிய மூலம் அல்லது உள்மூலம் மூல முளை இவற்றின்
மேல் தினமும் காலை கடன்
முடித்த உடன் தொடர்ந்து மூன்று
நாட்கள் தடவி வர இந்த
தொந்தரவுகள் கட்டுப்படும்
மூல சதை வீக்கம் குறையும்.
கூடவே மூன்று நாட்களும் பிடித்த பழங்கள் காய்கறிகள் அவல் போன்றவற்றை மட்டுமே
சமைக்காமல் சாப்பிட வேண்டும்.
அல்லது அரிசி சுடுகஞ்சி பழைய கஞ்சி
போன்றவற்றை மட்டுமே உப்பு புளி காரம் குறைத்த கூட்டுடன் சாப்பிட்டால்
பாதிப்பு பெருமளவில் குறைந்து விடும்.!
மோர்,இளநீர், சீனி எசன்ஸ் சேர்க்காத பழச்சாறு போன்றவற்றையும்
எடுத்துக்கொள்ளலாம்.
மூன்று நாட்களும் அசைவ உணவுகள் மற்றும் காப்பி தேநீர் பிஸ்கெட் சாக்லேட் ரொட்டி கேக் வத்தல் போன்ற இரசாயண உணவுகள் எதையும் சாப்பிடாமல்
இருக்க வேண்டும்.



