வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும் பான் எண் தெரிவித்தால் போதுமானது. சொத்து வாங்குவது, விற்பது, பரிசாக கொடுப்பது, கூட்டாக மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்த விலக்கு பொருந்தும்.




