தமிழக அரசின் கூட்டுறவுத் துறை, முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பொது விநியோகத்திட்டப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.



