பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பார்கள். மேலும், பல பெண்கள் பல்வேறு துறைகளில் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி மாதந்தோறும் மாதவிடாய் நாட்களில் அவர்களுக்கு ஏற்படும் வலியை பொருட்படுத்தாமல் பணிகளுக்கு செல்கின்றனர். அத்தகைய, சூழ்நிலைகளில் பெண்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.
அதாவது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தின் 6 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசு பரிந்துரை செய்து வருவதாகவும், மேலும், விரிவான ஆலோசனைக்கு பிறகு இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.




