கோடீஸ்வரன் ஆகணுமா?.. இதுல முதலீடு செய்தால் அது ஈஸி தான்..!!

தற்போதைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான முதலீடு திட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் இதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு அதில் உள்ள ரிஸ்க் மற்றும் முதலீட்டு காலத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

1993ல் தொடங்கப்பட்ட ஃபிராங்க்ளின் இந்தியா ப்ரைமா ஃபண்ட்டில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 19.59% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில்  அது இப்போது ரூ.2.31 கோடி ரூபாயாக மாறி இருக்கும். ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்டில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 19.28% சிஏஜிஆர் உடன் இப்போது ரூ.2.13 கோடி ரூபாயாக மாறி இருக்கும். அதேபோல் எஸ்பிஐ லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்டில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.1.21 கோடி ரூபாயாக மாறி இருக்கும். பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை செய்வதற்கு முன் ரிஸ்க் மற்றும் முதலீட்டு காலத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது கட்டாயம்.

Read Previous

கோத்திரம் அறிந்து பெண் கொடு..!! பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!!

Read Next

படித்ததில் பிடித்தது: குழந்தைகளுக்கு கதை சொல்லுங்க கற்பனை வளரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular