ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு மளிகைப்பொருள் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிச்சந்தையில் கிடைப்பதை விட, மிக குறைந்த விலையில் பிரீமியம் ரூபாய்.199 மற்றும் எலைட் ரூபாய்.299 என இரண்டு வகையாக விற்கப்படும். இந்த மளிகை தொகுப்புகள், ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.




