திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானம் (24) என்பவர் தனியார் உணவகத்தில் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். சந்தானத்திற்கும், அங்கு உள்ள அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு இஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்நிலையில், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறிய தனது சொந்த ஊருக்கு சந்தானம் அழைத்துச் சென்றுள்ளார். மாயமான மகள் குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் சந்தானத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.




