வெண்பொங்கல் இப்படி செஞ்சு பாருங்க.. சுவை அருமையா இருக்கும்..!!

வெண் பொங்கல் செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கோப்பை (250 கிராம்)
பாசிப் பருப்பு – 50 கிராம்
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 1 மேஜைக்கரண்டி
முந்திரி – 10
இஞ்சி – 1/2 இன்ச் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
தண்ணீர் – 5 கோப்பை
உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை

1. பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும்.

2. பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து கழுவிக் கொள்ளவும்.

3. அடுப்பில் குக்கரை வைத்து 5 கோப்பை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

4. பிறகு பாசிப்பருப்பை போட்டு அரை வேக்காடு வேக விடவும்.

5. அதனுடன் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.

6. குக்கரில் 5 விசில் சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

7. தனியாக ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதனுடன் உடைத்த முந்திரியை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

8. குக்கரில் ஆவி அடங்கியதும், வறுத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.

9. அதனுடன் சிறிது நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும்.

10. பிறகு மீதமுள்ள நெய்யையும் ஊற்றி, கிளறி, சிறிது நேரம் மூடி வைக்கவும்.

11. பொங்கல் சிறிது ஆறியவுடன் பரிமாறவும்.

இந்த மாதிரி இன்னும் நிறைய ரெசிபிஸ்க்கு மறக்காம என்னோட பேஜ ஃபாலோ பண்ணிக்கோங்க…

 

Read Previous

பல பிரச்சனைகளுக்கு தீர்வு இந்த பிரண்டை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

இந்த பாம்பே சட்னி ஒன்னு போதுங்க.. இட்லி தோசை பூரி சப்பாத்தினு எது செஞ்சாலும் தொட்டுக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular