நமது முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை சாப்பிடும் போது என்ன பேச்சு பேசாமல் சாப்பிடுங்க.. என்று கூறியிருப்பார்கள். அதன் உண்மையான காரணம் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் முறைக்கும் நம்முடைய முக அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. நமது மண்டை ஓட்டின் அமைப்பு கபாலத்தில் தொடங்கி தொண்டை குரல்வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிவெடைகிறது. அதுமட்டுமின்றி உணவு உள்ளே செல்லும் வாய்ப்பகுதியில் இருந்து உணவு தொண்டை வலியாகத்தான் வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. இதனால்தான் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். உணவும் உணவு குழாயும் சுவாசக் குழாயும் காற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இதனால் நாம் உணவு உண்ணும் போது பேசினால் தப்பி தவறி உணவானது சுவாசக் குழாயினுள் சென்று விட்டால் அது நமது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும். இதனால் தான் பெரியவர்கள் சாப்பிடும் போது பேச கூடாது என்று கூறுகிறார்கள். உண்மையான அறிவியல் ரீதியான அர்த்தம் இதுதான்.




