உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் கால கட்டத்தில் எல்லாம் ஒரு சில நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குழந்தைகளையும் சரி பெரியவர்களையும் சரி குளிக்க சொல்வார்கள். தீபாவளி பண்டிகையின் போதும் எண்ணைய் தேய்த்து குளிக்க சொல்வார்கள்.இந்த எண்ணெய் குளியலில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சர்மம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். தோல் அரிப்பு பிரச்சனைகள் எதிர்த்துப் போராடவும் இந்த எண்ணெய் குளியல் உதவி செய்கிறது. எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் மன அழுத்தத்தை இது குறைக்கும். இளம் சூடுள்ள எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மற்றும் தசைகளை தளர்வடைய இது உதவி செய்கிறது. இதனால் முதுமையான தோற்றம் ஏற்படும் பிரச்சனை சரியாகும். சருமத்தை இளமையாக வைக்க இந்த எண்ணெய் குளியல் உதவி செய்கிறது.




