நடிகர் ஷிஹான் ஹூசைனி புற்றுநோய் காரணமாக பாதிப்படைந்து, சிரமப்பட்டு வந்த நிலையில் காலமானார்.
1986ஆம் ஆண்டு இயக்குனர், கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பத்ரி என்னும் திரைப்படத்திழும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிட தக்கது.
இது மட்டுமில்லாமல், மதுரையில் மிகவும் பிரபல கராத்தே மாஸ்டராக இருந்து, 300க்கும் அதிகமான வீரர்களுக்கு வில்வித்தை பயிற்சி அளித்தார்.
இவர் புற்றுநோய்யால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அனால், மருத்துவ பலனின்றி இன்று காலமானார் என்பது வருத்தத்திர்க்கு உள்ளாகியது.
மேலும், ரு.5. லட்சத்தை தமிழக அரசு விளையாட்டு மேம்பட்டு ஆணைய நிதியில் இருந்து இவரது சிகிச்சைக்காக வழங்கியுள்ளது. இவர், கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.
தான் ஒரு நல்ல நடிகர், பயிற்சியாளர் என்பதையும் கடந்து, ஒரு நல்ல மனிதர் என்பதை வலியுணர்த்தும் வகையில், இவரது உடலை தானம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.




