நெஞ்சு சளியை கரைத்து எடுக்கும் சுக்கு பால்.. எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..??
நெஞ்சு சளி உள்ளவர்கள் எந்த விதமான மருத்துவம் செய்தாலும் இந்த நெஞ்சு சளி மட்டும் சரியாகவில்லை என சொல்லி நெஞ்சு சளி உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த சுக்கு பாலை குடிக்க வேண்டும். சுக்கு பாலை குடிப்பதன் மூலம் நெஞ்சு சளி குணமாகும். அப்படிப்பட்ட சுக்கு பால் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுக்கு
மிளகு
அரிசி திப்பிலி
சித்தரத்தை
அதிமதுரம்
நறுக்கு மூலம்
பச்சரிசி
உளுந்து
ஏலக்காய் இரண்டு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி பனைவெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த பொடியை கலந்து கிளறவும் வெந்தவுடன் இரண்டு கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும் இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பரிமாறலாம்.
இந்த சுக்கு பால் குடிப்பதால் என்னென்ன பயன்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
இது நெஞ்சு சளியை கரைக்கும். அதுமட்டுமின்றி வறட்டு இருமலை நீக்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும்.




