இந்திய சீன எல்லை ராணுவ பிரச்சனை பல காலமாக இருந்து வருகிறது. இதிலும் கடந்த சில வருடங்களாக சீன ராணுவ படை இந்திய எல்லைக்குள் ஊடுருவி நமது நாட்டில் சில பகுதிகளை கைவசப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சனை பெரிதாக அவ்வப்போது பார்க்கப்பட்டாலும் மற்ற நேரங்களில் இதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இன்று திரு ராகுல் காந்தி அவர்கள் சீனாவிடம் இருக்கும் இந்தியாவை சேர்ந்த நிலங்களை மீட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் இன்று பங்கேற்று பேசிய ராகுல் காந்தி இந்திய சீன எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் கேக் வெட்டி கொண்டாடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கச்சத்தீவு விவகாரத்தை பற்றி கேள்வி எழுப்பிய திமுக எம்பி திரு டி ஆர் பாலு அவர்கள் அதை மீட்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.



