நாம் எல்லோரும் சிறுவயதிலிருந்தே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்களால் கூறப்பட்டு கேட்டிருப்போம். அப்படி கூறப்படுகின்ற தால் வாங்கியும் வருகிறோம். ஆனால் அப்படி அட்சய திருதி அன்று ஏன் தங்கம் வாங்க வேண்டும் என்று உங்கள் யாருக்காவது தெரியுமா. அது ஏன் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வளர்பிறை செய்தியையே அட்சய திருதியை ஆகும். அட்சயம் என்றால் தேயாமல் இருப்பது குறையாமல் இருப்பது வளர்ந்து வருவது என்று பொருள்கள் இருக்கின்றன. நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில் தானங்கள் செய்து புண்ணியத்தை பெறுவது மிகவும் நல்லதாகும்.
இந்த நாளில் ஏதேனும் புதிய விஷயங்களை புதிதாக தொடங்கினாலோ அல்லது முதலீடுகள் செய்தாலோ நமக்கு அதிகமாக அதிர்ஷ்டமும் செழிப்பும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வருடம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று அட்சய திருதியை வருகிறது. ஆகையால் உங்களால் முடிந்த அளவு தங்கம் வாங்குவது நல்லதாகும்.




