கடந்த பல வருடமாக பேசும் பொருளாக இருக்கும் ஒரு விஷயம் தான் ரஷ்யா உக்ரைன் போர். பல நாடுகள் ரஷ்யாவிற்கும் உக்ரைன்னுக்கும் மாறி மாறி தனது உதவியை அளித்து வந்தது. இதை நிறுத்தவும் பல நாடுகள் அடியெடுத்து வைத்தது. ஆனால் அது இப்போது வரை நடைபெறவில்லை. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் இந்த போரை நிறுத்த ஒரு முக்கிய பங்கை வகித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் அந்த முயற்சியில் இருந்து வெளிவந்துள்ளார்.
ரஷ்யா 2014 ஆம் ஆண்டு படையெடுப்பின் மூலம் உக்ரைன் கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது நம் அனைவருக்கும் தெரியும். இது சட்டவிரோதமானது என்று பல சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இப்போது அந்தப் போரை முடிவு செய்வதற்காக உக்ரைனை ரஷ்யா உடன் இணைக்க டிரம்ப் அவர்கள் விரும்பி இருந்தார். ஆனால் இதற்கு ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இந்தப் பிடிவாதத்தினால் அமைதிப் பேச்சிலிருந்து வெளியேறினார் ட்ரம்ப்.



