உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் தீர இந்த பரிகாரம் மட்டும் பண்ணுங்க போதும்..!!
தினமும் காலை குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டுவிட்டு காகத்திற்கு ஒரு கைப்பிடி உலர் திராட்சையை அளிக்க வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் உங்களின் அத்தனை கஷ்டங்களும் தீர்வாக அமையும். அதுமட்டுமின்றி இதை செய்ய முடியாதவர்கள் காலையில் புதிதாக வெள்ளை சோறு வடித்து நாம் சாப்பிடுவதற்கு முன் அதில் எள் சிறிதளவு கலந்து காகத்திற்கு அளித்து காகம் சாப்பிட்டதற்கு பின் நாம் சாப்பிட்டு வரலாம். இதனால் நாம் அனுபவித்து வரும் துன்பங்கள் பனிபோல விலகும். காகங்களுக்கு உணவளிப்பதன் மூலம் சனிபகவானின் அருள் கிடைக்கும் மற்றும் நம் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைத்து வாழ்வில் முன்னேற முடியும்.




