அனைவருக்கும் பெரும் மன உளைச்சலை கொடுக்கும் ஒரு வழி தான் இடுப்பு வலி. இது விபத்து உடல் உழைப்பு மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும். வயது அதிகரிக்க இடுப்பு வலியும் அதிகமாகிறது. இதன் காரணம் தசைநார்கள் தசைகள் மூட்டுகள் முதுகெலும்பு இணைப்புகள் நரம்புகளில் வலி ஏற்படுவதால் அதன் விளைவாக இது ஏற்படுகிறது.
சில நேரங்களில் சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்றுப் பகுதி பிரச்சனை காரணமாகவும் இடுப்பு வலி ஏற்படுமாம். நமது தசையில் வலி எடுத்து எரிச்சல் குத்துதல் போன்ற உணர்வு இருக்கும் பட்சத்தில் அங்கு இடுப்பு வலி இருக்கும். இடுப்பு வலி இருந்தால் நமது உடலை வளைத்தல் முறுக்குதல் தாக்குதல் நடப்பது போன்ற செயல்பாடுகளை செய்யக்கூடாது. அப்படி செய்தால் இது இன்னும் கடுமையாக தான் மாறும்.
ஓய்வு எடுத்தாலும் இடுப்பு வலி குறையாது. நமது உடலில் பலவீனம் உணர்ச்சியின்மை போன்ற பிரச்சனையை கூட இதனால் வரலாம். இடுப்பு வழியால் அவஸ்தி படுபவர்கள் ஐஸ் பேக்கை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு மெல்லிய துணியில் அந்த ஐஸ் கட்டியை வைத்து இப்படி செய்ய வேண்டும்.
இதைப் போலவே தினம் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதேபோன்று தியானமும் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு இயற்கையான எண்ணெய்களை உபயோகம் செய்தால் இந்த பிரச்சனை நிச்சயமாக வராது.



