கோடை வெயிலிலும் துளசிச் செடி செழித்து வளர..!!3 கரண்டி கற்றாழை ஜெல் இருந்தா போதும்..!!

வீட்டில் வைத்திருக்கும் துளசிச் செடி கடும் வெயில் காலத்திலும் செழித்து வளர கற்றாழை ஜெல்லுடன் சில பொருட்களை கலந்து குளிர் உரம் தயாரிக்க வேண்டும். அதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

துளசிச் செடி செழித்து வளர

கோடை காலம் வந்தவுடன் வீட்டு தோட்டங்களில் பல செடிகள் செத்துவிடும். இதை தடுப்பதற்கு தான் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குளிர் உரம் தயாரிக்க வேண்டும். துளசி ஒரு மதக் கண்ணோட்டத்தில் புனிதமாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியமான குணங்கள் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.

பயிர்கள் செத்துபோவதற்கு காரணம் கடுமையான சூரிய ஒளி, நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணில் இருந்து ஈரப்பதம் இழப்பு போன்றவை தான். கோடையில் துளசி செடிக்கு நிவாரணம் அளிக்க குளிர்ந்த உரம் தயாரிக்க வேண்டும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தினால் போதும். குளிர்ந்த உரம் தயாரிக்க, இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு கப் புதிய மோர் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீரையும் எடுக்கவும்.

பின்னர் ரு கற்றாழை இலையை எடுத்து, அதை நடுவில் இருந்து வெட்டி ஜெல்லை வெளியே எடுக்கவும். இரண்டு ஸ்பூன் ஜெல் போதுமானது.

 

இப்போது அதில் மோர் சேர்க்கவும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மூன்றையும் நன்றாக கலக்கவும். இந்த கலவையில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, ஒரு வாளியில் நிரப்பி மூடி வைக்கவும். கோடை வெயிலிலும் துளசிச் செடி செழித்து வளர…3 கரண்டி கற்றாழை ஜெல் இருந்தா போதும். இப்போது குளிர்ந்த உரம் தயாராகி விடும்.

இந்த இயற்கை உரத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை துளசி செடியின் அடிப்பகுதியில் ஊற்றவும். உரத்துடன் கலந்த தண்ணீரை மாலையில் மட்டுமே செடியின் மீது ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் துளசிச்செடி செழித்து வளரும்.

Read Previous

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமா..?? பழங்களில் தோல் மட்டும் போதுமாம்..!!

Read Next

உங்களுக்கு எடை இழக்க ஆசை இருக்கா..?? இந்த பானத்தை வாரத்தில் இரண்டு முறை குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular