நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் சீக்கிரம் சிக்கு வாடை அடிக்காம இருக்க சில சூப்பர் டிப்ஸ்..!!

 

பச்சை மிளகாய்:
எண்ணெய் பாட்டில்ல ஒரு நாலு அஞ்சு பச்சை மிளகாயை (காம்பை எடுக்காம) அப்படியே போட்டு வைங்க. சிக்கு வாடை வராது. மிளகாய் காய்ஞ்சதும் மாத்திடலாம்.

புளியம்பழம்:
சில வீடுகள்ல ஒரு சின்ன துண்டு புளியம்பழத்தையும் போட்டு வைப்பாங்க. இதுவும் எண்ணெய் கெட்டுப் போகாம பாதுகாக்கும்.

வேப்ப இலைகள்:
காஞ்ச வேப்ப இலைகளை எண்ணெய்ல போட்டு வைக்கிறதும் சிக்கு வாடை வர்றத தடுக்கும். வேப்ப இலைகள் எண்ணெய் கெட்டுப் போகாம பார்த்துக்கும்.

காற்றுப் புகாத பாட்டில்:
எண்ணெயை எப்பவுமே காற்றுப் புகாத பாட்டில் அல்லது டப்பாவுல போட்டு, நேரடி சூரிய ஒளி படாத, குளிர்ந்த, காய்ஞ்ச இடத்துல வைங்க. அப்பதான் எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போகாது.

மிளகு சேர்ப்பது:
நான்கு அல்லது ஐந்து மிளகு போட்டு வைத்தால், அந்த எண்ணெய் நீண்ட நாட்களுக்கு சிக்கு வாடை அடிக்காமல் இருக்கும்.அளவா வாங்குங்க:
ரொம்ப நாளைக்கு ஒரே எண்ணெயை பயன்படுத்தாம, தேவைக்கு ஏத்த மாதிரி சின்ன சின்ன பாட்டில்ல வாங்கி, சீக்கிரமே யூஸ் பண்ணிடுங்க.

இந்த டிப்ஸ் எல்லாம் உங்க எண்ணெயை சிக்கு வாடை இல்லாம, ரொம்ப நாளைக்கு நல்லா வெச்சுக்க உதவும்.

 

Read Previous

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும் என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் தெரியுமா..??

Read Next

திருமணத்தைப் பற்றிய ஒரு அழகான பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular