தண்ணீர் அருந்துவது என்பது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தான். ஆனால் தண்ணீர் எவ்வாறு அருந்துவது மற்றும் எந்த நேரத்தில் எல்லாம் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1.உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பிலிருந்து நாம் தப்பிக்கலாம்.
2.உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
3. தண்ணீர் அதிகமாக நம் உடலுக்கு தேவையான அளவு அருந்தும் போது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நாம் தப்பிக்கலாம்.
4. மூன்று வேலையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ஜீரண சக்தியை அதிகப்படுத்தலாம்.
5. அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் நன்றாக செரிமானம் நடக்கும்.
6. விடியற்காலையில் எழுந்ததும் பல்துலக்கி விட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.
7. குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்னதாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
8. தண்ணீர் அதிகமாக அருந்துவது ஆரோக்கியம் தான். ஆனால் தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது.
9. பகல் நேரத்தில் அதிகமாக தண்ணீர் அருந்தலாம். ஆனால் இரவு நேரத்தில் சற்று கம்மியாகவே தண்ணீர் அருந்த வேண்டும்.




