பாஜகவின் பண்ணையடிமையாக மாறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், “திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக. திமுகவை எதிர்க்கும் மாநாடு என்ற காரணத்தால் திராவிடத்தை இந்துத்துவா காலடியில் கொண்டு சென்று வைத்து விட்டார் இபிஎஸ். அவரது துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.



