கேரளா: விஷ்ணு (36) – ரேஷ்மா (34) தம்பதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் இருவரும் நிதி நெருக்கடியால் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பணப்பிரச்சனை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில் கடன் கொடுத்த கும்பல் விஷ்ணு வீட்டிற்கு வந்து மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தம்பதி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.




