மகாராஷ்டிரா: சந்திரசேகரன் (38) – திஷா (30) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பக்கவாதத்தால் சந்திரசேகரன் படுத்த படுக்கையில் இருந்தார். அந்த சமயத்தில் திஷாவுக்கு ஆசிப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கண்டித்த கணவரை கொல்ல இருவரும் முடிவு செய்து தலையணையால் சந்திரசேகரன் முகத்தை அமுக்கி கொன்றனர். அவர் இயற்கையாக மரணித்தார் என திஷா நாடகமாடினாலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை வெளியானது. திஷா, ஆசிப் கைது செய்யப்பட்டனர்.




