தமிழ்நாட்டில் 3,900 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், ஓஎம்ஆர் தாள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கேள்விக்கு ஒரே ஒரு வட்டத்தை மட்டும் கருமையாக்குங்கள். வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய பகுதிக்கு கீழே எத்தனை கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறீர்கள்? என்ற தகவல்களை அளிக்க வேண்டும். அதற்கு பக்கத்தில் கைரேகை வைக்க வேண்டும். கைரேகை வைக்கவில்லை என்றால் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




